அதிராம்பட்டினம் பகுதிகளில் சில வருடங்களாக இருசக்கர வாகன திருட்டு அன்றாடம் நடந்து வருகிறது .
இதுகுறித்து பல புகார்கள் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது .
ஆனால் இதுவரை அந்த புகாரின் மீது நடவடிக்கையோ அல்லது வாகனத்திருடர்கள் குறித்த தகவல்களோ மனுதாரர்களுக்கு தெரிவிப்பதில்லை என கூறப்படுகிறது.
இருப்பினும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பாதிக்கப்பட்ட நபர்கள் புகார்களை அளித்து வருகின்றனர் .
இந்நிலையில் இன்று(28/04/2019) தக்வா பள்ளியருகே நிறுத்தப்பட்ட டியோ புதிய வாகனம் இன்று லுஹர் தொழுகும் நேரத்தில் மர்ம நபர்களால் திருடப்படும் காட்சி பள்ளிவாசலின் CCTV காமிராவில் பதிவாகி உள்ளன.
இது குறித்து வாகனத்தின் உரிமையாளர் நூர்முஹம்மது காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளார்.
முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் பழைய போஸ்ட்டாபிஸ் சாலையில் உள்ள செல்போன் கடையின் முன்பாக நிறுத்தப்படடிருந்த டியோ வாகனம் பட்டபகலில் திருடப்பட்டது .
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாகனத்தை திருடிச் செல்லும் காணொளி பதிவு: