Friday, March 29, 2024

அதிரையில் கஞ்சா விற்ற இருவர் கைது,இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு!!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம்,அதிரையில் கஞ்சா விற்ற கணவன்-மனைவி இருவரையும் கை களவுமாக தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை ஹாஜா தலைமையிலான தமுமுகவினர் பிடித்தனர்.

அதிரையில் அண்மை காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து,அதிரை மற்றும் அதிரையை சுற்றியுள்ள இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகி தவறான பாதைக்கு சென்று கொண்டு இருக்கின்றனர் என தகவல்கள் அதிகமாக உலாவந்தன.

இந்நிலையில் அதிரை தமுமுகவினர் காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி அருகே இருக்கும் உப்பளம் போகும் வழியில் குப்பத்தில் பெரியசாமி,செல்லமா என்பவரின் வீட்டில் சுமார் 100 கஞ்சா பொட்டலங்களுடன் கை,களவுமாக பிடித்தனர்.இதனையடுத்து உடனே தமுமுகவினர் அதிரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் பரவியதால் இளைஞர்கள் குவியத்தொடங்கினர்.சம்பவ இடத்திற்கு வந்த அதிரை காவல்துறையினர் செல்லமா என்பவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.

இதுபோன்று அதிரையில் சமூக ஆர்வலர்கள் பலமுறை கஞ்சா விற்பனையாளர்களை பிடித்து கொடுத்துள்ளனர்.ஆனால் அவர்கள் எளிதில் ஜாமீன் பெற்று வெளியே வந்து மறுபடியும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர்.இதற்கு ஓர் முடிவு வேண்டும் என்பதே இங்குள்ள பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...