தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் பல நாட்களாகவே ஆடுகள் திருட்டு போவும் வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இன்று (05/11/18) திங்கள் கிழமை வழக்கம்போல் ஆடு திருடிவிட்டு செல்லும் பொழுது பொது மக்களிடம் சிக்கிக்கொண்டனர்.
காரைக்குடியை சேர்ந்த முகமது காசிம் (வயது 34 ) த/பெ பிர் முகமது, அறுமுகம (வயது 55) இவர்களின் முக்கிய கூட்டாளியாகா அரஃபாத் ஆசிக், பசிர் , சின்ன கருப்பு , ஹரி இதில் முகமது காசிம் மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரும் இன்று அதிராம்பட்டனத்தில் ஆடுகளை திருடி இன்னோவோ காரில் எற்றி செல்லும் பொழுது அப்பகுதி இளைஞர்கள் துரத்தி சென்று அந்த திருடர்களை மடக்கி முயன்ரனர். ஆனால் அதிவேகமாக கார் சென்றதால் மடக்கி பிடிக்க முடியவில்லை.
திருடி வேகமாக சென்ற கார் ஓட்டுனரின் நிலை தடுமாரி கார் ஒரு மிக பெரிய கல்களில் மீது மோதியது. உடனேஅப்பகுதி இளைஞர்கள் மடக்கி பிடித்து விசரித்ததில் தொடர்ந்து அதிரையில் 60க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி உள்ளதாக வாக்குமுலம் கொடுத்தனர்.
பின்னர் அதிரை காவல் நிலையத்திர்க்கு புகார் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகினறனர்.