Friday, April 19, 2024

அதிமுக அரசே மீண்டும் ஒரு வரலாற்று பிழையை செய்திடாதே !

Share post:

Date:

- Advertisement -

மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் மாநில அதிமுக அரசு தொடர் ஜனநாயக படுகொலைகளை நிகழ்த்த எத்தனித்துள்ளது வெட்ட வெளிச்சாமாக தெரிகிறது.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செல்லும் என யாரோ எழுதிக்கொடுத்த தீர்ப்பை வாசித்துள்ளது நீதிமன்றம்.

இதனை அடுத்து TTV ஆதரவு MLAக்களாக உள்ள ரத்தின சபாபதி, கலைச்செல்வன் , பிரபு ஆகிய மூவரின் பதவியை பறித்து அரிப்பைத் தீர்த்துக்கொள்ள முனைகிறது.

மத்திய அரசின் கைப்பாவை என்ற அழுக்கை துடைக்க அதிமுக விரும்ப வில்லை போலும், ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை நான்கு சுவற்றிர்க்குள் உட்கார்ந்து தீர்ப்பாக வாசிப்பதில் அர்த்தம் இல்லை.

தகுதி நீக்க நடவடிக்கைக்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபர்களின் தொகுதிக்கு சென்று வாக்களித்த மக்களின் மன நிலையை அறிய நீதி மன்றம் குழு ஒன்றை நியமித்து அவர்களின் (MLA) செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின்னரே நீக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு இருத்தல் வேண்டும்.

மக்களுக்கு தான் அரசே தவிர… அரசுக்காக மக்கள் இல்லை என்பதை ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமும் புரிந்துகொள்ள வேண்டும்.

பாஜகவின் வழிகாட்டல்கள் மூலம் மீண்டும் ஒரு தவறை (3 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பறிப்பு)செய்ய துடிக்கும் அதிமுக அரசு, அம்மா ஜெயலலிதாவால் வாய்ப்பு அளிக்கப்பட்ட மூன்று MLA மீது தவறான நடவடிக்கைகள் மூலமாக பதவி பறிப்பு என்ற அராஜாக போக்கு கட்டவிழ்த்து விடப்படுமானால் நிலைமை மோசமாகும், ஜனநாயகம் சிதைந்து போகும்.

மூச்சுக்கு முன்னூறு முறை அம்மாவின் அரசு என கூறி வரும் நீங்கள் இனி ஒரு வரலாற்று பிழையை செய்ய வேண்டாம்.

அதிரை கலிஃபா.
ஒருங்கிணைப்பாளர், அதிரை எக்ஸ்பிரஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...