அதிரை வெஸ்டர் ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று 22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இன்றைய முதல் தினம் இரு ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் சிட்டினி பாய்ஸ் அதிரை அணியினரும், செருவாவிடுதி அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த சிட்னி அணி 20 ஓவர்களில் 127ரன்கள் குவித்தது அனைத்து விக்கெட் இழப்பிற்க்கு விளையான்டு முடித்தனர் . பின்னர் 128 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய செருவாவிடுதி அணி 129 ரன்கள் எடுத்து 9 விக்கெட் இழப்பிற்க்கு செருவாவிடுதி அணியினர் வெற்றி பெற்றனர்
பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் திருவாருர் JRCC அணியினரும் கும்பகோணம் ஜனா அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த திருவாருர் JRCC அணி 108 ரன்களுக்கு 6 விக்கெட் இழப்பிற்க்கு 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று பின்னர் களமிறங்கிய கும்பகோணம் அணி 18 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
குறிப்பு : அதிரை WCC அணி நடத்தும் இத்தொடர் குறித்த தகவல் மற்றும் ஆட்ட முடிவுகள் தினமும் அதிரை எக்ஸ்பிரஸில் பதிவேற்றம் செய்யப்படும்.