Thursday, March 28, 2024

வாரிசு அரசியலை ஒழிப்போம் என முழங்கியவாறு வாரிசுக்கே வாக்கு கேட்ட மோடி !

Share post:

Date:

- Advertisement -

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் உட்பட ஆண்டிப்பட்டி, பெரியகுளம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள், மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தேமுதிக, பாமக, தமாகா என கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி இன்று தேனி வந்திருந்தார்.

அப்போது காங்கிரசையும், திமுகவையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கழுவி கழுவி ஊத்தினார். அப்போது மோடி பேசியதன் சுருக்கம் இதுதான் :

“காங்கிரஸும் திமுகவும் என்னால் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். இந்தியா வளர்வதை காங்கிரஸால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காங்கிரசின் நிதியமைச்சராக சிதம்பரம் இருந்தபோது அவரது மகன் இந்த நாட்டை கொள்ளையடித்தார். வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டி குடும்ப அரசியலை பாஜக ஒழிக்கும்” என்று சொன்னார்.

“வாரிசு அரசியலை பாஜக ஒழிக்கும்” என்று ராகுல் காந்தியைதான் மோடி சொன்னாரா? அல்லது முக ஸ்டாலினை சொன்னாரா? என தெரியவில்லை. ஆனால் டெல்லியில் இருந்து கிளம்பி வந்திருக்கிறதே ஓபிஎஸ் மகனுக்காகத்தான் ! இது வாரிசு அரசியல் ஆகாதா ? அதே மேடையில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் இருந்தார் ? இது வாரிசு அரசியல் கிடையாதா ?

இதை தவிர ஜெயக்குமார் மகன், மனோஜ் பாண்டியன் மகன், இவர்கள் எல்லாம் எந்த கணக்கில் வருவார்கள் என்று தெரியவில்லை. கூட்டணியில் உள்ள ஜிகே வாசனே ஒரு வாரிசுதான்.. தமிழிசையே ஒரு வாரிசுதான்… இப்படி லிஸ்ட் பெரிசாகி கொண்டே இருக்கிறது. இருந்தாலும் மோடி மேடையை சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு இதை சொல்லியிருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஓபிஎஸ்-ன் வாரிசான ரவீந்திரநாத்துக்கு பிரச்சாரம் செய்த மேடையிலேயே மோடி வாரிசு அரசியலை ஒழிப்போம் எனக் கூறியுள்ளது சமூகவலைதளங்களில் திரும்பவும் ஒரு ரவுண்டு அடித்து கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...