Thursday, April 18, 2024

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் இணையதளம் மூலம் பெயர் சேர்க்கலாம்!!

Share post:

Date:

- Advertisement -

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியலில் பெயர் விடுபட்டோர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் பெயர்களை சேர்க்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல், 2019 தொடர்புடைய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்களில் உள்ள விவரங்களை கொண்டு தயாரிக்கப்பட்டு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் பதிவு அலுவலரால் மாவட்ட தேர்தல் வாக்காளர் பட்டியல்கள் ேநற்று வெளியிடப்பட்டது.

மேற்கண்ட வாக்காளர் பட்டில்களில் வரைவு பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் http://www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் முதலில் அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க வேண்டும். அதற்கு அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது தொடர்புடைய இணையதளத்திலோ சென்று அவர்களது பெயர்களை சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இணையதளம் மூலம் பெயர் சேர்க்க விரும்புவோர் தங்களது பெயர் மற்றும் விவரங்களை http:// www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலமாக பதிவு செய்யலாம் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...