அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியருகே கொட்டப்படும் குப்பைகளால் அங்கு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தொற்றுநோய் உருவாகிறது.
இக்குப்பை மேடு சமையலறை அருகே உள்ளதால் சத்துணவு உண்னும் ஏழை குழந்தைகளுக்கு அவ்வப்போது வாந்தி பேதி ஏற்பட்டு வருகிறது.
இதனை கவனத்தில் கொண்ட அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் தனது சொந்த செலவில் குடிநீர் கொட்டகையை அமைத்தார்.
ஆனால் பொறுப்பற்ற அப்பகுதி மக்கள் அந்த கொட்டகையருகே மீண்டும் குப்பைகளை கொட்ட தொடங்கி விட்டனர்.
பொறுப்பற்ற இந்த ஜென்மங்களால் பள்ளி குழந்தைகளுக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
எனவே மண்டையில் மலம் சுமக்கும் பொறுப்பற்ற ஜென்மங்கள் மேற்கண்ட இடத்தில் குப்பைகளை கொட்டுவதை விடுத்து தங்கள் வீட்டிலேயே சேமித்து நோய் பீடிக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.
குப்பையை அகற்ற வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் குப்பையை கொடுத்தால் அழகாக பெற்று செல்லும் இச்சூழலில் இது போன்ற பொறுப்பு அற்றவர்களை எண்ணி வேதனைப்படத்தான் முடிகிறது.