அன்பார்ந்த நல் உள்ளங்களே கடந்த 10 ஆம் தேதி சமூக வலைத்தளங்கள் மூலம் மல்லிப்பட்டினத்தில் வாகன விபத்தில் தலையில் படுகாயமடைந்த எனது மகள் அஃப்ரா பாத்திமாவின் உயிர் காக்க நிதி உதவிகளை கோரியிருந்தோம்…
அதன்படி பல பக்கங்களிலிருந்து வங்கி மூலமாகவும் அமைப்புகள் மூலமாகவும் குழுமங்கள் மூலமாகவும் தனி நபர்கள் மூலமாகவும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நிதி வந்து விட்டது..
தக்க சமயத்தில் எங்களது குழந்தையின் உயிர்காப்பதற்கு உதவிய உங்களுக்கு ஏக இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாகவும்…
போதுமான நிதி வந்துவிட்டதால் இனி நிதி உதவிகளை வங்கி மூலமாகவோ பிற வழிகளிலோ அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்..
மருத்துவ சிகிச்சை பலனளித்து எனது மகள் குணமடைந்து வருகிறாள்..
உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி கலந்த பிரார்த்தனைகள்…
அப்துல் ரஹ்மான்
மல்லிப்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்..