வருகிற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்ற பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இன்று வெள்ளிக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இறுதிக்கட்ட ஆலோசனையை நடத்தியது. இதில் கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன.
இன்று 12.45 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களை அறிவித்தார்.
திமுக :
வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, சேலம், நீலகிரி, திருவண்ணாமலை, திண்டுக்கல், பொள்ளாச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி
கள்ளக்குறிச்சி
காங்கிரஸ் :
ஆரணி, திருவள்ளூர், கரூர், விருதுநகர், தேனி, சிவகங்கை, கன்னியாகுமரி, திருச்சி, கிருஷ்ணகிரி, புதுச்சேரி
விடுதலை சிறுத்தைகள் :
விழுப்புரம், சிதம்பரம்
இந்திய கம்யூனிஸ்ட் :
திருப்பூர், நாகை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் :
கோவை, மதுரை
மதிமுக :
ஈரோடு
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் :
இராமநாதபுரம்
கொ.ம.தே.க :
நாமக்கல்
ஐ.ஜே.கே :
பெரம்பலூர்
ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.