Saturday, April 20, 2024

பொருளாதார பின்னடைவிற்கு பணமதிப்பிழப்பே காரணம்!!!

Share post:

Date:

- Advertisement -

தற்போது நிலவும் பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு பணமதிப்பிழப்பின் தாக்கமே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் தெவோஸ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதைத் தெரிவித்தார். அமைப்புசாரா தொழில்களின் பொருளதாரம் பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், அத்தகைய தொழில்கள் பல மூடப்பட்டுவிட்டதாகவும், ஏனெனில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அந்த நிறுவனங்களால் தப்பிப்பிழைக்க முடியவில்லை’ என்றும் குறிப்பிட்டார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஓரளவு அதிகப்படுத்தியது என்றும், ஆனால் அதன் அளவு மிகக்குறைவு என்றும் ரகுராம் குறிப்பிட்டார். ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட விதம் குறைபாடுகளை சிலர் தெரிவித்துவருவதாக குறிப்பிட்ட ரகுராம், சில பிரச்னைகளை சரிசெய்தால் ஜி.எஸ்.டி நீண்டகாலத்திற்கு பலனளிக்கும் என்றும் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுப்பதைப்பற்றி குறிப்பிட்ட ரகுராம் ராஜன், தங்களிடம் அதுகுறித்து கருத்துகேட்கப்பட்ட போது தான் தெரிவித்ததாகவும் குறிப்பிட்ட ரகுராம் ஆனால் இந்த நடவடிக்கை மிகக்கடுமையானது என்றும் குறிப்பிட்டார். மேலும், நாம் கருத்துக்களை மட்டுமே சொல்லமுடியும் அமைப்பைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்

 

தினகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...