தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிரை பேரூராட்சி சார்பில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு நிகழ்ச்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றிய விழிப்புணர்வு, மற்றும் அறிவுரைகளை தெருக்களில் வீடு வீடாக சென்றும் மற்றும் கடைகளில் நோட்டீஸ் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.