Thursday, March 28, 2024

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு கையூட்டு வாங்குகிறதா அதிரை பேரூராட்சி ?

Share post:

Date:

- Advertisement -

உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. அதன்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வாழை இலைகள், துணிப்பை போன்றவைகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டன.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரசின் உத்தரவை மீறி சட்டத்திற்கு புறம்பாக பிளாஸ்டிக் பயன்பாடு இன்றளவும் இருந்து வருகிறது. மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக அதிரையில் பேரூராட்சி அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பலமுறை ஆதாரத்துடன் புகார் அளித்தும், அதிரை பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்கை கடைபிடிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக வாரம் ஒரு முறையோ, அல்லது மாதம் இருமுறையோ ஆய்வு என்கிற பெயரில் சிறு வியாபாரிகளிடம் பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றி அபராதம் விதிப்பதாகவும், பிளாஸ்டிக் பயன்படுத்தும் பெரு நிறுவனங்களை கண்டுகொள்வதில்லை என்றும் சரமாறியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

எனவே பிளாஸ்டிக் பயன்படுத்தும் வியாபாரிகள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து அரசு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிரை பேரூராட்சி முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும், வலியுறுத்தலாகவும் உள்ளது. அதிரை பேரூராட்சி நிர்வாகம் பாரபட்சமற்ற நடவடிக்கையை மேற்கொள்ளுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...