தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் மக்களை பெரும் அளவில் வாட்டி வருகிறது.
இதனை தணிக்கும் வகையில் அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், நற்பணி மன்றங்கள் போன்ற பலவேறு அமைப்பினர் இலவச நீர் மோர் பந்தல் அமைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுக்கோட்டையில் இன்று(24/05/2018) கோடை வெயிலின் தாக்கம் குறையும் வகையில் மக்கள் எதிர்பார்ப்பான கோடை மழை வெளுத்து வாங்கியது.
அதிக காற்றுடன் கூடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது போன்று தொடர்ந்து மழை பெய்தால் நிலத்தடி நீர் பற்றாக்குறை நீங்கும் என்றும், விவசாயிகளின் கணவும் நிறைவேறும் என்றும் அவர்கள் கூறினர்.