அதிரையில் நாளுக்கு நாள் மின் தடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த இரு மாதங்களில் 50 க்கும் மேற்பட்ட காரணமில்லா மின் தடை ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்கும்போது முறையான பதிலேதும் கிடைப்பதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்படுகிறது. மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் என்று கூறி முழு நேர மின் தடை செய்யும் மின் வாரியம், ஏன் தினசரி நீண்ட நேர தொடர் மின் தடை செய்கிறது என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க நாளை மறுநாள் (24-10-2018) புதன்கிழமை மீண்டும் மின் பராமரிப்பு பணிகள் சம்பந்தமாக அதிரை, மதுக்கூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார ஊர்களுக்கு நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் மின் பற்றாக்குறையை மேற்கோள் காட்டி ஆட்சியை பிடித்த அதிமுக அரசு, முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, மின் தடை போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற திணறுவதால் வரும் சட்டமன்ற தேர்தலில் இதற்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என பொதுமக்களால் பேசப்பட்டு வருகிறது.