கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட ரயில் சேவை நேற்று 01-06-2019 முதல் திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் டெமோ ரயில் சேவையாக தொடங்கப்பட்டது.
இது குறித்து இன்று இரவு தென்னக ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
தொடங்கிய முதல் நாளிலேயே தோல்வியை தழுவியுள்ளதால் பயணிகள கவலையடைந்துள்ளனர்.
திருவாரூர்-காரைக்குடி அகலப்பாதையில் ரயில் இயக்கும் திட்டம் கைவிடப்பட்ட தகவலால் ரயில் பயணிகள் சங்கத்தினர் வேதனையடைந்துள்ளனர்.