கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் இன்று முதல் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனம் பகுதியில் அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர். புகழை பறைசாற்றும் வகையில் அரசு சார்பில் நாணயம், அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பேருந்து நிலைய நுழைவு வாயிலில் புதிய பெயர் அறிவிப்பு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தை 2002ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.