Saturday, April 20, 2024

சென்னையில் ஐபிஎல் போட்டியை ரசிகர்களுக்கு கிடுக்குபிடி!

Share post:

Date:

- Advertisement -

காவிரி மேலோண்மை வாரியத்தை அமைப்பதற்கு தாமதப்படுத்தும் மத்திய அரசை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக போராட்டம் நடந்து வருகின்றன. இந்நிலையில்தான் கடந்த 7-ந்தேதி (நேற்றுமுன்தினம்) ஐபிஎல் 11-வது சீசன் தொடங்கியது.

4-வது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 8 அணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியை நடத்தக்கூடாது என்று தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அமைப்புகளும் இதே கருத்தை வலியுறுத்துகின்றன.

இதற்கிடையில் வேல்முருகன், சீமான் போன்றோர் மைதானத்தை முற்றுகையிடுவோம் எனக் கூறினார்கள். இதனால் ஐபிஎல் போட்டி மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா போட்டியை மாற்ற இயலாது என்றார். இதனால் நாளை திட்டமிட்டபடி போட்டி நடக்க இருக்கிறது.

போட்டி நடைபெற இருப்பதால், வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கும், மைதானத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை போட்டியை காணச்செல்லும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ரசிகர்கள் தண்ணீர் பாட்டில், பேனர்கள், பதாகைகள், கேமரா, செல்போன் எடுத்த வரக்கூடாது. இனவெறி தூண்டும் வகையில் முழக்கம் எழுப்பக்கூடாது. தேசிய கொடியை அவமத்தித்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். மைதானங்களை சேதப்படுத்தினால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பவார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் 50-ற்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டுக்களை விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...