Friday, March 29, 2024

குறை சொல்லிப் புறம்பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்

Share post:

Date:

- Advertisement -
”குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத் தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக). (அல்குர்ஆன்104:1-9)

இன்று புறம் பேசுவது மனிதர்களிடையே ஒரு பொழுது போக்கு போல் ஆகிவிட்டது. இது இம்மை மறுமை இரண்டிலும் மனிதனை நாசமாக்கிவிடும். ஆனால் அதை அவர்கள் உணர்வதே இல்லை. புறும் என்பது ஒருவருடைய குறையை அவருக்குப் பின்னால் பேசுவதாகும். இச்செயலை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இருந்தபோதும் புறம் பேசாத மக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். காரணம் அக்குற்றத்தின் கடுமையை மக்கள் சரியாக உணரவில்லை.

கொலை, களவு, விபச்சாரம், மது அருந்துவது போன்றவை தீய நடத்தை என்பதை ஏற்றுக் கொள்ளும் மனிதன்; புறம் பேசுவதை சாதாரணமான குற்றமாக நினைக்கின்றானோ என்னவோ அதைப்பற்றி கவலையே படாதவனாக காலம் தள்ளிக் கொண்டிருக்கிறான். அதிலும் சிலருக்கு மற்றவர்களை குறை சொல்லாவிட்டால் தூக்கமே வராது என்றுகூட சொல்லலாம். மற்றவர்களைப்பற்றி எதையேனும் அவிழ்த்து விடவேண்டுமே! இல்லையென்றால் உண்ட உணவு செரிக்காதே என்கின்ற ரகமும் உண்டு.

அதுவும் நம்மில் சிலருக்கு அடுத்தவர்களை பற்றி பேசவில்லை என்றால் தலை வெடித்து விடும்.
அது அடுத்தவர்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை. இதனால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்திருக்கிறது என்பது எல்லோரும் அறிந்ததே.
0 புறம் பேசுவதால் ஏற்படும் தீமைகளில் முதன்மையானது, புறம் பேசுபவர் அல்லாஹ்வின் வெறுப்புக்குள்ளாகி விடுகிறார். அல்லாஹ்வின் வெறுப்புக்குள்ளாகிறார் எனும்போது அதைவிட பெறும் கைசேதம் வேறு என்னவாக இருக்க முடியும்?
0 புறம் பேசுபவர்கள் பொய் சொல்வதற்கும் தயங்காதவர்களாகவே இருப்பார்கள். ஏனெனில் தனக்குப் பிடிக்காத ஒருவரைப்பற்றி குறை சொல்லும்போது இயற்கையாகவே பொய் அந்த இடத்தில் இரக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிடும். ஆக! புறம் சொல்லக்கூடியவர் பொய்யனாகவும் மாறிவிடுகிறார்.

0 புறம் பேசுவது விபச்சாரத்தைவிடக் கொடியது என்கிறார்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். விபச்சாரம் ஒரு மோசமான குற்றம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் புறம் கூறுவது அதைவிட கொடிய பாவம் என்பதை மனிதன் உணர்கிறானா என்றால் இல்லையென்னு தான் சொல்ல வெண்டும். ஏனெனில் உணர்ச்சியின் உந்துதலால் விபச்சாரம் செய்பவன்கூட அதை மறைவாகத்தான் செய்கிறான். ஆனால் அதைவிடக் கொடிய பாவமென இஸ்லாம் கூறும் புறம்பேசுதல் பகிரங்கமாகவே இடம், பொருள், ஏவல், என்று எந்த வரைமுறையுமில்லாமல் எல்லா இடங்களிலும், நேரங்களிலும் எவ்வித பயமுமின்றி வீறு நடை போடுகிறது. இந்த வீறு நடை காட்டும் பாதை நரகம் என்பதை எத்தனை பேர் உணர்வார்கள்?

0 புறம் பேசுவது இறந்துவிட்ட தனது சகோரனின் இறைச்சியை உண்பதற்கு சமம் என்கிறது திருக்குர்ஆன். அலட்சியமாக எண்ணிவிடாதீர்கள், ஏனெனில் இதை கூறுவது அல்லாஹ்வின் அருள்மறை. ”மேலும் உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்.” (49:12)

0 புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள் தமது கரங்களினாலே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

0 புறம் பேசுவதால் உள்ளம் இருளடைந்துவிடும். நிம்மதி பரிபோய்விடும். தொடர்ந்து புறம் பேசக்கூடியவர் தனது உறவு வட்டாரங்களை, நட்பு வட்டாரங்களை வெகு சீக்கரம் இழந்து விடுவார். அவர் வீட்டை விட்டு இறங்கினாலே ஷைத்தானுக்கு மிகப்பெரும் கொண்டாட்டம்தான். ஆஹா! இன்றைக்கு நாம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் நமக்கு உதவி செய்ய ஆள் வந்து விட்டார் என்று அடுத்த தெருவுக்கு சென்றாலும் சென்றுவிடும்.
0 புறம் பேசுபவர்கள் கோழையாகவே கருதப்படுவர். ஏனெனில், தைரியமுள்ளவர்களாக இருந்தால் அடுத்தவரின் குறையை நேருக்கு நேர் பேசிடுவார்கள்.
0 புறம் பேசியவன் யாரைப்பற்றி புறம் பேசினானோ அவர் மன்னிக்காதவரை அல்லாஹ்வும் மன்னிப்பதில்லை என்கிறது இஸ்லாம்.
0 புறம் பேசுவதால் ஏற்படும் மிகப்பெரும் நஷ்டம் என்னவெனில், புறம் பேசியவன் இவ்வுலகில் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த அத்தனை நன்மைகளையும் அவன் யாரைப் பற்றி புரம் பேசினானோ அவனுக்கு மறுமையில் வழங்க வேண்டிய நிலைக்கு ஆளாவான் என்று சொல்வதைவிட புறம் சொன்னவனின் நன்மைகள் பிடுங்கப்பட்டு புறம் பேசப்பட்டவனிடம் கொடுக்கப்படும். அதோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை! புறம் பேசியவனிடம் நன்மைகள் குறைவாக இருந்தால், புறம் பேசப்பட்டவனின் பாவங்கள் இந்த புறம் பேசியவனின் தலையில் வந்து விழும். ஆக, புறம் பேசியவன் தான் சேகரித்து வைத்திருந்த நன்மைகளை இழப்பதோடு புதிதாக பாவச்சுமையையும் பெற்றுக்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவான்.
”மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள் யார் என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள்.”(அறிவிப்பாளர் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்;: அஹ்மது)
”ஒருவர் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே, இன்னவள் அதிகமாக நோன்பு பிடிக்கிறாள், அதிகமாக தான தர்மங்கள் செய்கிறான். ஆனால் அப்பெண் பக்கத்து வீட்டினருக்கு தன் நாவால் துன்பம் தருகிறாள். என கேட்டபோது அவள் நரகத்தில் இருப்பாள் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே இன்னவள் குறைவாக நோன்பு நோற்பாள் தர்மங்கள் செய்கிறாள் தொழுகிறாள். இக்த் என்ற இடத்தில் உள்ள காளை மாடுகளை தர்மம் செய்கிறாள்  – ஆனால் தன் நாவால் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தருவதில்லையே என கேட்ட போது இந்த பெண் சுவனத்தில் இருப்பாள் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கம் அளித்தார்கள்.”(அறிவிப்பவர்: அபூஹுரைராரளியல்லாஹு அன்ஹு நூல்கள்: அஹ்மத், பைஹகீ)

புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர் என்பதை அறிது கொள்வோம். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.

மனிதன் புறம்பேசுவதால் எவ்வளவு பெரிய இழப்புக்குள்ளாக நேரிடுகிறது என்பதை சிந்தித்துப்பார்த்தால் சீர்பெற முடியும்.
புறம் பேசுவதை விட்டும் நம்மை தற்காத்துக் கொள்ளும் வழிகள்:
மற்றவர்களைப்பற்றி நல்லவைகளையே நினைப்போம். நல்லவைகளையே எடுத்துச் சொல்வோம். ஒருவர் மரணமடைந்துவிட்டால் அவரிடமுள்ள குறைகளை கூறாமல் அவர் செய்த நன்மைகளை எடுத்துக்; கூறும்படி இஸ்லாம் கூறுகிறதல்லவா, உயிருடன் இருப்பவர்களுக்கும் இதே அளவு கோளை மேற்கொள்வோம்.
எவரேனும் புரம் பேசினால், முதலில் நாம் அவரை தடுக்க வேண்டும். நம்மால் தடுக்க இயலவில்லை என்றால் நாம் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றுவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நாமும் அப்பாவத்தில் சிக்கிக் கொள்வோம். இக்கொடிய பாவத்திலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க அதகமதிகமாக அவனிடம் உதவி தேடுவோம்.
– எம்.ஏ. முஹம்மது அலீ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...