Thursday, March 28, 2024

காரைக்குடி-திருவாரூர் வழித்தடத்தில் சென்னைக்கு விரைவுரயில் சேவை தொடங்க எம்.எல்.ஏ தலைமையில் கோரிக்கை மனு !!

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர்-காரைக்குடி ரயில் வழித்தடத்தில் சென்னைக்கு விரைவு ரயில் சேவை துவங்க வேண்டும் என பட்டுக்கோட்டை எம்எல்ஏ தலைமையில், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சேகர் தலைமையில் பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தினர், பட்டுக்கோட்டை அனைத்து ஜமாத்தார்கள், தஞ்சை மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்கத்தினர், பட்டுக்கோட்டை பைத்துல்மால் நிர்வாகிகள், பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் ஏ. உதயகுமார்ரெட்டியை இன்று 11.03.2019 திங்கட்கிழமை காலை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

அக்கோரிக்கை மனுவில், காரை க்குடியிலிருந்து சென்னைக்கு விரைவு ரயில் சேவை வசதியினை செய்து தர வேண்டும் மற்றும் பட்டுக்கோட்டை அண்ணா நகரில் உள்ள லெவல் கிராசிங் கேட் எல்.சி. 94க்கு தரைவழிப்பாலம் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் ஏ. உதயகுமார்ரெட்டி, சென்னையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு இந்த ரயில் தடத்தில் இரண்டு மாதத்திற்குள் விரைவு ரயில் இயக்க திட்டமிட்டு வருவதாகவும், பட்டுக்கோட்டை அண்ணா நகரில் எல்.சி. 94 தரைவழிப்பாதை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...