கல்விகண் திறந்த மேதை என்று போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று அதிரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவிக்கபட்டது. அதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் பழ. சக்திவேல் , மாவட்ட பொருளாளர் அதிரை ஜியாவுதீன் , தொகுதி செயலாளர் தேவராஜன் , தொகுதி இணைச் செயலாளர் , தொகுதி இணைத் தலைவர் முகம்மது தம்பி மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் பட்டுக்கோட்டையிலும் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.