Tuesday, April 23, 2024

உலகில் முதல் முறையாக “அரபு மொழியில் திருக்குறள்” சொல்லும் நிகழ்ச்சியுடன் நடைபெற்ற கல்வித் திருவிழா!!

Share post:

Date:

- Advertisement -

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த உலகில் முதல் முறையாக அரபு மொழியில் திருக்குறள் சொல்லும் நிகழ்ச்சியுடன் அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையத்தின் ஆண்டு விழா சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு (26.04.2019) ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையத்தின் மதரஸா பிரிவு மாணவ, மாணவியரின் கிராஅத், ஸூரா, கலிமா & துஆக்கள் ஒப்புவித்தல், அதான் (பாங்கு) சொல்லுதல், கவிதை படித்தல், சொற்பொழிவு, தமிழ் & உர்தூ பாடல்கள் பாடுதல் மற்றும் அரபு உரையாடல் நிகழ்ச்சிகளும், தமிழ்ப் பிரிவு மாணவ, மாணவியரின் சொற்பொழிவு, அரபு மொழியில் திருக்குறள், ஆத்திச்சூடி மற்றும் தமிழ் மாதங்கள் ஒப்புவித்தல் நிகழ்ச்சிகளும் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பயிற்சி மையத்தின் தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும், சங்கத்தின் குடும்பங்கள் சங்கமம் நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்றோருக்கும் சிறப்பான பரிசுகளும், தமிழ்ப் பிரிவு மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களுடன் பரிசுகளும் சங்கத்தின் பொறுப்பாளர்கள், ஆலோசகர்கள், சமூக நல ஆர்வலர்கள், சகோதர அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளம்பரதார்கள் ஆகியோரால் வழங்கப்பட்டன.

பள்ளியின் தலைமை இமாம் அஷ்-ஷைஃக் அபூ ஆதிஃப் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இளவல் முஹம்மது ஆதிஃப் (எகிப்து) கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் மவ்லவீ எஸ்.ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபி இஸ்லாமியப் பாடல் படித்தார். பொதுச்செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார். இணைப் பொருளாளர் ஹச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்றினார். துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ துஆ ஓத விழா இனிதே நிறைவுற்றது.

குவைத் வெல்டன் ரியர் புரோமோட்டர்ஸ், என்.க்யூ.ஜி ஸ்டேஷனரி, அறந்தை கணேசன் அறக்கட்டளை, வின்வே கார்கோ & கூரியர் சர்வீசஸ், குவாலிட்டி ஃப்ரஷ் சிக்கன் மற்றும் ஏ.எஸ்.ட்டி செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் ஆகியோர் பரிசுகளுக்கான பங்களிப்பை செய்திருந்தனர்.

வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம், பெண்களுக்கு தனியிட வசதியுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் சங்கத்தின் நிர்வாகிகள், கல்விக் குழு & சுற்றுலாக் குழு பொறுப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் செய்திருந்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 400க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...