Friday, March 29, 2024

உயிர்காக்கும் நீச்சல் பயிற்சியை 12 நாட்களில் கற்றுக் கொள்ள, சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது!!

Share post:

Date:

- Advertisement -

 

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரிந்து வைத்திருக்க வேண்டிய, நீச்சல் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
மழை வெள்ளம் பெருக்கெடுத்தால் தன்னுயிரை மட்டுமல்ல மற்றவர்கள் உயிரையும் காக்க உதவும் கடவுள் நீச்சல்..! அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அற்புதமான வித்தை நீச்சல்..!
உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும் நீச்சல் பயிற்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அவரை எளிதாக கற்றுக் கொள்ள சென்னை மாநகராட்சி நீச்சல்குளங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரீனா நீச்சல்குளம், செனாய் நகர் நீச்சல் குளம், வேளச்சேரி நீச்சல்குளம் ஆகிய இடங்களில் ஒரு பிரிவுக்கு 20 பேர் வீதம் தினமும் காலை மாலை என மொத்தம் ஒவ்வொரு நீச்சல் குளத்திலும் 80 பேருக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஆர்வத்துடன் ஏராளமான சிறார்கள் பங்கேற்றனர்.
நீச்சல் பயிற்சிக்கு அழைத்து வந்த பெற்றோர், உயிர்காக்கும் நீச்சல் பயிற்சி ஒவ்வொரு குழந்தையும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியது என தெரிவித்தனர்
நீச்சல் பயிற்சியால் சுவாசக் கோளாறு நீங்குகிறது என்றும், உடலில் வீணான கொழுப்பு கரைந்து உடல் கட்டுக்கோப்பாக மாறும் என்றும் நீச்சல் பயிற்சியாளர் ப்ரீத்தி தெரிவித்தார்
12 நாட்கள்  நடைபெற உள்ள இந்த நீச்சல் பயிற்சியில் 6 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். எனவே தண்ணீரில் நீச்சல் கற்று உடல் பருமனுக்கு எதிராக எதிர் நீச்சல் அடிப்போம் வாருங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...