Thursday, March 28, 2024

அரசின் உத்தரவை மீறுகிறதா அதிரை பேரூராட்சி ??

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் சுற்றுச்சூழல் நலன் கருதி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. பிளாஸ்டிக் தொடர்பான அனைத்து பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப் பைகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முன்பை விட குறைந்துள்ளது. ஆனால் முழுமையான தடை அமலில் இருந்தும் அதிரையில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் தான் உள்ளன.

அரசின் உத்தரவை மீறி சட்டத்துக்கு புறம்பாக பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு இன்னமும் அரங்கேறி வருகிறது. இவ்விஷயத்தில் அதிரை பேரூராட்சி அதிகாரிகள் மெத்தனபோக்கை கடைபிடித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதிரை பேரூராட்சி கண்துடைப்பு நடவடிக்கையாக வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை ஒரு சில கடைகளில் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகிறது.

அதிரை பேரூராட்சிக்கு தெரிந்தே பல இடங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பிளாஸ்டிக் தடை விஷயத்தில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் கண்டிப்புடன் செயல்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...