தஞ்சை மாவட்டம்,
அதிராம்பட்டினம் மேலத்தெரு பகுதியில் உள்ள காட்டுபள்ளி என்னும் தர்காவில் இன்று(21/02/2018) காலை அதிரையை சேர்ந்த நபர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து, அதிரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்கு விரைந்த தமுமுகவினர் அந்த நபரின் உடலை தமுமுக அவசர ஊர்தி மூலம் அவர் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அவர் வீட்டில் அந்த நபரின் உடலை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால்,தமுமுகவினரே அந்த உடலை அதிரை தக்வா பள்ளிவாசலில் வைத்து குளிப்பாட்டி தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்தனர்.
தன் குடுபத்தார் இறந்தால் கூட சிலர் கண்டுகொள்ளாத சூழ்நிலையில் இவர்களின் சேவையை பொதுமக்கள் வியப்புடன் கண்டனர்.