அதிரை CMP லைன் பகுதியில் அமைந்துள்ள இஜாபா பள்ளியில் தீனியாத் மக்தப் மற்றும் குர்ஆன் மனனம் செய்யும் வகுப்புகள் மாணவர்களுக்கு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று அவ்வகுப்புகளின் ஆண்டு நிறைவு விழா இஜாபா பள்ளியில் நடைபெற்றது. இதில் மக்தபில் பயிலும் மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். இன்று புதன்கிழமை அஸர் தொழுகை முதல் இஷா தொழுகை வரை நடைபெற்ற இவ்விழாவில் பலர் கலந்துகொண்டனர்.