வருகின்ற 08.01.2019 செவ்வாய்க்கிழமை உலக ஆம்புலன்ஸ் தினத்தையொட்டி இன்று 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை கிரசண்ட் ப்ளட் டொனர்ஸ் தன்னார்வல அமைப்பு சார்பாக ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது.
அதிரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் LIONS. அகமது, நவாஸ் கான் (rotary club adirai), காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர். அகமது கபீர், கிரசண்ட் ப்ளட் டொனர்ஸ் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறப்பாக சேவை செய்து வரும் த.மு.மு.க அவசர ஊர்திக்கும், அதிரை பைத்துல்மால் அவசர ஊர்திக்கும், செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கத்தின் அவசர ஊர்திக்கும், 108 அவசர ஊர்திக்கும் சிறப்பான சேவையை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.