Friday, April 19, 2024

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் பசுமைப்பயணம்..!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை சுற்றுச்சூழல் மன்ற தலைவர் வ.விவேகானந்தம் செயலாளர் எம்.எப்.முஹம்மது சலீம், பொருளாளர் எம்.முத்துக்குமரன், துணை செயலாளர் மரைக்கா.கே.இத்ரீஸ் அஹமது,தணிக்கையாளர்என்.ஷேக்தம்பி, விதை அறக்கட்டளை நிறுவனர் சக்திகாந்த் ஆகியோர் ஆத்திக்கோட்டை மேலக்காடு கிராமத்தில் உள்ள அருள்மிகு முருகன் கோவில் தோட்டத்தில் கிராம மக்களால்  வளர்க்கப்பட்டு வரும் புனித காடுகளை பார்வையிட்டனர்.

ஆதிபராசக்தி வாரவழிபாட்டுமன்றத்தின் மாவட்ட தலைவர்.செம்பாளூர்.வை.முத்துவேல் மற்றும் வெற்றி ஆகியோர் அங்கு வளர்க்கப்படும் செம்மரம், வேம்பு, வேங்கை ஆகிய மரங்களையும் முருகன் கோவிலில்  உள்ள மருத்துவ குணம் நிறைந்த இருநூறு ஆண்டுகள் வயதுள்ள உதிர வேங்கைமரம் மேலும் அப்பகுதியில் காணப்படும் தும்பை , கவிழ்தும்பை, மூக்கிரட்டை , ஆதண்டை, நன்னாரி, விஷ்ணுகிரந்தி, துளசி,பழம்பாசி போன்ற மூலிகைகளைப்பற்றியும் விளக்கமளித்தனர்.

மழை நீர் சேமிப்பிற்காக வெட்டப்பட்ட குளத்தையும் சுற்றுச்சூழல் மன்றத்தினர் பார்வையிட்டனர்.

அடிக்கடி இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற இடங்களுக்கு சென்று பார்வையிட்டு விபரங்களை சேகரித்து பொதுமக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...