வரலாறு காணாத கனமழையால் பெரு வெள்ளத்தில் மிதக்கும் ஹைதராபாத்.. மீட்பு பணிகள் தீவிரம் !
தெலுங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெருவெள்ளத்தால் ஒட்டுமொத்த மாநிலமே மிதந்து கொண்டிருக்கிறது. ஹைதராபாத் நகரில் வெள்ளத்தில் சீக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் சாலைகளில் காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் பாய்ந்தோடுகிறது. கார்களும் மனிதர்களும் நடமாடிய தெருக்கள் மலைகளில் பெருக்கெடுத்தோடும் காட்டாறுகளைப் போன்ற பெருவெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. ஹைதராத் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீரால் சூழ்ந்து கிடக்கின்றன. ஒரே நாளில் 26 செ.மீ அளவுக்கு மழை கொட்டியதால்