“சிரித்துக்கொண்டே சொன்னால் அது வன்முறைக் கருத்து அல்ல” – டெல்லி உயர்நீதிமன்ற கருத்தால் சர்ச்சை!
டெல்லியில் சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற சமயத்தில் பா.ஜ.க அமைச்சர் அனுராக் தாக்கூர், போராட்டக்காரர்களுக்கு எதிராகச் செயல்படுமாறு அழைப்பு விடுத்த நிலையில், இது தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் பா.ஜ.க அரசின் குடியுரிமைச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே டெல்லியில் கடும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக வெறுப்புக் கருத்துகளை விதைத்த ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பா.ஜ.க எம்.பி பிரவேஷ் வர்மாவுக்கு