திருவாரூரில் ரயில்நிலைய முற்றுகை போராட்டம் நடத்திய மமக-வினர் கைது !(படங்கள்)
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி சலோ என்ற பெயரில் பல லட்சம் விவசாயிகள் டெல்லிக்குள் நுழையும் போராட்டத்தை கடந்த 7 நாட்களாக நடத்தி வருகின்றனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது இரவு பகல் பாராமல் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மனிதநேய மக்கள் கட்சியின் விவசாய அணி சார்பில் மாபெரும் இரயில் நிலைய முற்றுகை போராட்டம் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.