Thursday, April 18, 2024

NRC, CAA-வால் அதிருப்தி : பாஜக சிறுபான்மை பிரிவில் இருந்து 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல் !

Share post:

Date:

- Advertisement -

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த 48 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி பிரச்சனை காரணமாக கட்சியில் இருந்து விலகியுள்ளனர். கட்சித் தலைவர்கள் தங்களிடம் பாகுபாடு காட்டுவதாகவும் பாஜகவில் ஜனநாயகம் எஞ்சியிருக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

CAA மற்றும் NRC க்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்புக்களைக் கட்டுப்படுத்த பாஜக கடுமையாக போராடி வருகிறது. இப்போது கட்சியிலும் அதனால் பிரச்சனைகளை சந்தித்துள்ளது.

மத்திய பிரதேச மாநில, போபாலில் உள்ள கட்சியின் சிறுபான்மை பிரிவினைச் சேர்ந்த 48 பாஜக நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய சிஏஏ சட்டம் தொடர்பாக பிரச்சனை எழுப்பி பாஜகவில் இருந்து விலகியுள்ளனர்.

பாகுபாடு கட்சியில் விலகிய தலைவர்கள் கட்சிக்குள் பாகுபாடு காட்டுவதாகவும், கட்சி உறுப்பினர்கள் ஒரு சமூகத்திற்கு எதிராக மோசமான கருத்துக்களை தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

வீடு வீடாக ஆதரவு எங்காவது பார்த்தீர்களா போபாலின் பாஜக சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பதவியில் இருந்து விலகிய ஆதில்கான், ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், பாராளுமன்றத்தில் ஒரு அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்றிவிட்டு, பின்னர் வீடு வீடாகச் சென்று ஆதரவைக் கோருவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? என் கேட்டுள்ளார். குடியுரிமை (திருத்தம்) சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய பிரச்சனைக்காக சனிக்கிழமை ஆதில்கான் பதவி விலகினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...