Thursday, April 18, 2024

நாகையில் கொட்டும் மழை… களத்தில் இறங்கிய தமீம் அன்சாரி எம்எல்ஏ !

Share post:

Date:

- Advertisement -

நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சீரமைப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி.

நாகை மற்றும் நாகூர் பகுதிகளுக்கு இன்று சென்ற தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியை ஆய்வு செய்ததோடு தேங்கி நின்ற மழைநீரை அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

நாகை மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக இடை விடாது அடைமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதுடன் ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. இதனை சீரமைக்கும் பணி சாரல் மழைக்கும் மத்தியில் மேற்கொள்ளப்படுகிறது.

துப்புரவு உள்ளிட்ட சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை சந்தித்து பேசிய நாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி, அவர்களை பாராட்டியதோடு நன்றியும் தெரிவித்தார். அப்போது தங்களுக்கு மழை கோட் கொடுத்தால் உதவியாக இருக்கும் என அந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., இன்னும் 10 நாட்களுக்குள் தனது கட்சி நிதியில் இருந்து துப்புரவு ஊழியர்களுக்கு மழை கோட் வழங்கப்படும் என உடனடியாக உறுதியளித்தார். இதைக்கேட்ட நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...