அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சமீபத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்புபொதுத்தேர்வை 194 பேர் எழுதினர். இதில் 61% பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். கொரோனா ஊரடங்குக்கு பிறகுகுறுகிய கால அவகாசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வு என்பதால் தங்களால் உரிய பயிற்சிகளை மேற்கொள்ளமுடியவில்லை என தேர்ச்சி வாய்ப்பு தள்ளிபோயிருக்கும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எதுவாகினும்அடுத்தடுத்த தேர்வுகளை விரைவாக எழுதி தேர்ச்சி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை தங்களுக்குஇருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
அதிரையர்களுக்கு கல்வி அறிவை வழங்குவதில் MKN மதரஸா டிரஸ்ட் தவிர்க்க முடியாத பங்களிப்பை அளித்துவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தடிரஸ்ட்டின் கீழ் இயங்க கூடிய காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியிலிருந்து 96 மாணவிகள் தேர்வுஎழுதியிருந்தனர். இதில் அத்தனை பேருமே தேர்ச்சி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். மாணவிகளை 100% தேர்ச்சிபெற செய்த தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்கள், பள்ளிபணியாளர்கள் ஆகியோருக்கு பெற்றோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 63 மாணவ மாணவிகளில்98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளி அரசின் சிறுபான்மையினர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரை மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் 91 மாணவிகள்பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இதில் 99 சதவீத பேர் தேர்ச்சி பெற்று அனைவரையும்மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். தனியார் பள்ளிகள் மீதான மக்களின் மோகத்தை இந்த தேர்வு முடிவுகள் மூலம்அதிரை அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி தவிடுபொடியாக்கியுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று(ஜூன்.20) வெளியாகின.இதில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் 92 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர்.
தேர்வெழுதியோர் 61 பேர்மாணவர்கள் 32 பேர்மாணவிகள் 29 பேர்
இதில் 56 பேர்...