Saturday, April 20, 2024

அரபிக்கடலில் உருவானது ‘மகா’ புயல்… தொடர்மழைக்கு வாய்ப்பு !

Share post:

Date:

- Advertisement -

அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாகவும், அதற்கு ‘மகா’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ள மகா புயல் நாளை தீவிர புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மகா புயலால் காற்றின் வேகம் 95 முதல் 110 கிமீ இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரபிக்கடலில் கியார் புயல் நிலைகொண்டுள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக மகா என்னும் புயல் உருவாகியுள்ளது.

மகா புயலால் தமிழகத்தின் அடுத்த 24 மணிநேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழையும், விட்டு விட்டு கணமழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் மீனவர்கள் மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் அரபிக்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...