Friday, March 29, 2024

உங்கள் பகுதியில் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணற்றை உடனே மூடுங்கள் !

Share post:

Date:

- Advertisement -

குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த நிலையில், மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடவும் என்று சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி என்ற இடத்தில் நேற்று முன் தினம் மாலை 5.40 மணிக்கு மூடப்படாத ஆழ்துளை கிணறு ஒன்றில், 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் தவறி விழுந்து விட்டான். 29 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருந்த நிலையில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது.

மாநில மீட்பு படையினர் மற்றும் தனியார் மீட்பு குழுவினர் முயன்று சிறுவனை மீட்க முடியாததால், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் நேற்று வரவழைக்கப்பட்டனர். அவர்களும் பல்வேறு வழிகளில் முயன்று பார்த்தனர். ஆனால், சிறுவனை மீட்பதில் பின்னடைவே ஏற்பட்டது.

சிறுவன் தற்போது 100 அடிக்கும் கீழே இருக்கிறான். மேலும், கீழே சென்று விடாமல் தடுக்க அவன் கையில் கயிறு கட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆழ்துளை கிணறு அருகே புதிதாக குழி தோண்டும் பணி நடக்கிறது. தீயணைப்பு வீரர்களை உள்ளே இறக்கி குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 3 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

புதிதாக துளையிடும் இடத்தில் அதிக பாறைகள் இருப்பதால், தாமதம் ஏற்படுகிறது. பாறை உடைப்பு கருவிகளை பயன்படுத்தி துளையிடப்பட்டு வருகிறது.

சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட தமிழகத்தின் பல இடங்களிலும் கோவில்கள், தர்காக்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. சமூக வலைதளங்களிலும் பலரும் சுர்ஜித் மீட்கப்பட்டால்தான் உண்மையான தீபாவளி என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், உங்கள் பகுதியில் மூடப்படாத அல்லது சரியாக மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருக்குமானால், அதனை உடனே மூடவும் என்றும், இருட்டு அறைக்குள் மூச்சுத்திணறும் அவல நிலை எந்த குழந்தைக்கும் வேண்டாம் என்றும் பலர் பதிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...