மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் பல தரப்பட்ட மக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியுள்ள மத்திய அரசை கண்டித்தும், அதற்கு ஆதரவளித்த மாநில அரசை கண்டித்தும் சென்னை ஆவடியில் இன்று உலமா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் உலமா சபை, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.