அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 3 கிளைகளாக செயல்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களாகவே ததஜவில் பல்வேறு குழப்பங்களும், நிர்வாக அதிரடி மாற்றங்களும் நிகழ்ந்து வந்தன.
இதனையடுத்து நேற்று முன் தினம் அதிரை நகர ததஜ 3வது கிளையில் இருந்து ஓர் அறிக்கை வெளியானது.
அதில் பிறை சம்பந்தப்பட்ட விஷயத்தில் ததஜ தலைமை முறையற்று நடந்ததாகவும், பொருளாதார குற்றச்சாட்டாலும் அதிரை நகர ததஜ 3வது கிளை தற்காலிகமாக நிறித்தப்படுகிறது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டுமொரு தகவல் வெளியாகி உள்ளது.
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட அதிரை நகர ததஜ 3வது கிளை முழுமையாக நிறுத்தப்படுவதாகவும், மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தாக இயங்கி வந்த இக் கிளை இனிமேல் அதிரை தவ்ஹீத் ஜமாஅத் (அதஜ) எனும் பெயரில் இயங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்துடிப்புடன்..