பட்டுகோட்டை சீனிவாச நகரை சார்ந்த நம்பிராஜ் என்பவரின் மகள் வைஷியா என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் 600க்கு 490 மதிப்பெண் எடுத்திருந்தார்.
இதனிடையே டாக்டர் கனவுடன் இருந்த வைஷியா நீட் தேர்விலும் தோல்வியவிடைந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டார்.
இது குறித்து தகவலரிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களும், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நீட் தேர்வு தோல்வியால் பட்டுக்கோட்டை மாணவி தற்கொலை செய்துக்கொண்டுள்ளது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.