Thursday, March 28, 2024

Breaking : தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை !

Share post:

Date:

- Advertisement -

கடந்த 2009ம் ஆண்டு தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றவாளி என அறிவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு பொதுக்கூட்டம் ஒன்றில், மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக வைகோ மீது அப்போதைய திமுக ஆட்சியில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், வைகோ குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி தீர்ப்பளித்துள்ளார்.

குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன், தண்டனையை இன்றே வழங்குமாறு வைகோ நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி,இந்த வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இந்த வழக்கில்மேல்முறையீடு செய்ய வைகோவுக்கு ஒரு மாதம் கால அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

திமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக வைகோ அறிவிக்கப்பட்ட நிலையில், தேசதுரோக வழக்கில் குற்றவாளி என சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், தேர்தலில் போட்டியிடுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...