அதிரை எக்ஸ்பிரஸ்:- நாடுமுழுவதும் இன்று 69வது குடியரசு தினவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.வருடா வருடம் சிறப்பித்துக் கொண்டுவரும் சம்சுல் இஸ்லாம் சங்கம் இந்தாண்டும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இவ்விழாவில் சங்க தலைவர் அபூபக்கர் கொடியேற்றி,சுதந்திர போராட்ட நிகழ்வுகள் குறித்து சிற்றுரையாற்றினார்.மேலும் இவ்விழாவிற்கு சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் மற்றும் முஹல்லா வாசிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.