அதிரை எஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினம் பெருந்துநிலயத்தில் அமைந்து இருக்கும் மாற்றுத்திரநாளிகளுக்கான கழிவறை கடந்த (2011-2012) ஆண்டு பொதுநிதி திட்டத்தில் 2.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிவறை மிகவும் மோசமானநிலையில் உள்ளது.
மாற்றுத்திரநாளிகளுக்கான கழிவறை கட்டும் பணிகள் நிறைவடைந்து 5 வருடங்கள் ஆகியும் ஒழுங்கான பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் இருந்து வருகின்றது.
அரசிடம் இருந்து வரும் கழிவரைக்கான பராமரிப்பு பணங்களை பேரூராட்சி நிர்வாகம் என்ன செய்கிறது என்றும் மற்றும் மக்களின் பணங்கள் வீனடிக்கப்படுகிறதா என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இனிவரும் காலமாவது கண்டுகொள்ளுமா பேரூராட்சி நிர்வாகம் ? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
வீடியோ இணைப்பு :-