அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு துணை மின் நிலையம் வாயிலாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே அடிக்கடி ஏற்படும் மின் தடை, குறைந்த மின் அழுத்தம், ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட நுகர்வோர் அளிக்கும் புகார்களுக்கு உரிய நடவடிக்கைகளை அதிரை துணை மின் நிலைய பணியாளர்கள் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல சதாப்தங்களாக தொடர்கிறது.
இந்நிலையில், துணை மின் நிலைய அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து அதிரை பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய நகர கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் துணை மின் நிலைய பணியாளர்கள், தங்களது வேலையை முறையாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் மக்கள் பணியைவிட மின் வாரிய பணியாளர்களுக்கு வேறென்ன புடுங்குற வேலை இருப்பதாக கேள்வி எழுப்பிய அவர்கள், உடனடியாக அதிரை நகரில் அபாயகரமான மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை நட்டு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.