அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற போட்டியில் தஞ்சாவூர் – ஆலத்தூர் அணிகள் மோதின.
இப்போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ஆலத்தூர் அணியின் ஆதிக்கம் அதிகமிருந்ததன் காரணத்தினால் முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் ஆலத்தூர் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறிய தஞ்சை அணியின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. ஆட்டம் முடிவதற்கு 3 நிமிடங்களுக்கு முன்னதாக தஞ்சாவூர் அணி தனது முதல் கோல் அடித்து 1 – 1 என்ற கோல் கணக்கில் போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தது. இரு அணிகளின் கோல் சமநிலையில் இருந்ததால் டை – பிரேக்கர் முறை கடைபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த இரு அணிகளுக்கிடையில் வேறொரு தேதியில் Re – Match நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் சிவகாசி – காயல்பட்டினம் அணிகள் சந்திக்க உள்ளனர்.