Thursday, April 25, 2024

செங்கமலக்கண்னன் DSP பணி ஓய்வு விழா – திரளான அதிரையர்கள் கலந்து கொண்டு வாழ்த்து !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் முன்னாள் காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் செங்கமலக்கன்ணன், இவரது பணிக்காலத்தில் 0℅ வழக்குகள் இன்றி அதிரை நகரை கட்டுக்குள் வைத்து கொண்டார்.

பின்னர் இட மாறுதல் செய்யப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு இட மாறுதலில் சென்ற அவர் DSPயாக பதவி உயர்வு பெற்று பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளராக திறம்பட பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார் அதற்கான அரசு ஆனையை காவல் இலாக்கா வெளியிட்டது. அதன்படி இன்று பட்டுக்கோட்டை தனியார் அரங்கம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பணி ஓய்வு பெறும் செங்கமலக் கண்ணன் DSPக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

அதிராம்பட்டினம் அரசியல் கட்சிபிரமுகர்கள், இயக்க பிரதிநிதிகள், அதிரை முன்னாளத சேர்மன் SH. அஸ்லம், தமுமுக மாநில செயலாளர் அஹமது ஹாஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இதே அதிராம்பட்டினம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மற்றும் SDTU பட்டுக்கோட்டை SDPI கட்சியினர், ஊடகவியலாளர் A.ரஜபுமுகைதின் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர்.

பட்டுக்கோட்டை ஆட்டோ சங்க உரிமையாள, ஓட்டுனர்கள் கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற DSPக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...