அதிராம்பட்டினம் நகரில் உள்ள பழைய இரும்பு மின் கம்பங்களை அகற்றிவிட்டு சிமெண்ட் காரை கம்ப்ங்களாக மாற்றப்பட்டு வருகிறது.
அதன்படி தக்வா பள்ளி அருகே உள்ள மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர், கோரிக்கையின் பேரில் புதிய மின் கம்பம் வந்து சேர்தது.
அதனை நிறுவும் பணி இன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது அப்போது JCB இயந்திரம் மூலமாக புதிய மின் கம்பம் பொருத்தும் பணியின் போது ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக மின் கம்பம் தக்வா பள்ளியின் அடக்கஸ்தல சுற்று சுவர் சேதம் சேதம் அடைந்தது.
வெளிச்சமான நேரத்தில் அல்லவா மின் கம்பம் பொருத்தும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட வேண்டும் அதனை விடுத்து இருள் சூழந்த இரவு நேரத்தில் இது போன்ற பணிகளை செய்வதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறத்தான் செய்யும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.