Saturday, April 20, 2024

ஞானவாபி பள்ளியில் தொழுகையை தொடரலாம் – லிங்கம் இருந்ததாக கூறப்படும் பகுதியை பாதுகாக்க உத்தரவு !

Share post:

Date:

- Advertisement -

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்குமாறு மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரனை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது.

ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கூடிய ஆய்வு முற்றிலும் நிறைவடைந்த நிலையில், மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இதுகுறித்து நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு ‘அஞ்சுமன் மஸ்ஜித்தின்’ நிர்வாகக் குழுவின் மனுவை இன்று விசாரித்தது ஏற்றனர்.

இன்றைய விசாரணையின் முடிவில், ஞானவாபி மசூதில் முஸ்லிம்கள் எந்த தடையுமின்றி தொழுகை நடத்தலாம் எனவும் லிங்கம் கண்டுபிடிக்கபட்டதாக கூறப்படும் பகுதியை பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், ஞானவாபி மசூதி வளாகத்திற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கில் மனுதாரரான இந்து பெண்களுக்கு, கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி கோர்ட்டு விசாரித்து வருகிறது. இதன் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ஞானவாபி மசூதிக் குழுவின் மனு மீதான விசாரணை அடுத்ததாக, வரும் 19ம் தேதி தொடரும் என்று ஒத்தி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...