தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க தலைவர் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்டம் அதனை தொடர்ந்து அதிகரிக்கும் தற்கொலைகள் என நாளுக்கு நாள் நாளிதழ்களில் செய்திகள் வந்த வன்னம் உள்ளது.
இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் விடியல் சொல்லுமா விடியல் அரசு என்ற தலைப்பில் தமது கருத்தை பதிந்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் தற்கொலைகள்.
தற்கொலைகள் தொடர்ந்தாலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடுக்கத் தவறும் தமிழக அரசு.
பணம் கொடுத்ததால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தொடர்பான விளம்பரங்களில் நடித்தோம் என்கிற சமூக அக்கறை இல்லாத, பொறுப்பற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள்.,
டாஸ்மாக் மதுக்கடைகளை போல ஆன்லைன் சூதாட்டங்களை தமிழக அரசே ஊக்குவிக்கிறதா..? சந்தேகம்.
ஆட்டைக் கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதை போல தற்போது பள்ளி மாணவர்களையும் விட்டு வைக்காத ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் கொடூரம்.
தடுக்க தமிழக அரசு வலுவான சட்டம் கொண்டு வருமா..? இல்லை எவர் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன என்று அமைதி காக்குமா..?
இது மக்கள் நலன் காக்கும் அரசா..? அல்லது மக்களின் வீழ்ச்சியை கண்டு ரசிக்கும் அரசா..?
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு விடை கொடுக்கப்படுமா..?
விடை சொல்லுமா
விடியல் அரசு..?
சு.ஆ.பொன்னுசாமி