அதிராம்பட்டினம் ஆயிஷா மகளிர் அரங்கில் தமிழக நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க துவக்க விழா இன்று நடந்தது.
மாநில தலைவர் டாக்டர் கணேஷ்ராம் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை நியமித்தார்.
தலவராக செல்லராசு
துணை தலவராக அப்துல் காதர், சங்கத்தின் செயலாளராக சுபஹான், துணை செயலாளராக அக்ரம், பொருளாளராக முஹைதீன் மற்றும் அப்துல் கனி ஆகியீயோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இறுதியாக அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் பேசிய கனேஷ்ராம், மத்தியரசு அனுமதித்துள்ள இ காமர்ஸ் வணிகத்தில் பிஸ்னஸ் டூ கஸ்டமர் முறையை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் எனவும், பிஸ்னஸ் டூ பிஸ்னஸ் முறையை தடுக்க மத்திய அரசு தயங்க கூடாது என்றும் தெரிவித்தார்.
சிறு வணிகம் சிறு வணிகர்கள் கையில் மட்டுமே இருக்க வேண்டும் என்வும் கார்ப்பரேட் கைகளில் சிக்கி விடுவதால் சிறு வணிகர்கள் அழிவு பாதையில் இட்டு செல்கிறார்கள்.
மேலும் இந்தியாவின் வேலைவாய்ப்பு இன்மையக் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்து வருகிறது என்றும் மத்திய அரசு இதனை முறைப் படுத்தாவிட்டால் ஒட்டுமொத்த நுகர்பொருள் விநியோகஸ்தர்களை ஒன்றினைத்து போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என எச்சதித்தார்.