Friday, April 19, 2024

முத்துப்பேட்டையில் விதிமீறிக் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்குப் பேரூராட்சி அதிகாரிகள் சீல்வைத்தனர்.

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் புதிதாகப் பள்ளிவாசல் கட்டியுள்ளனர். இந்நிலையில் குடியிருப்புக்கு அனுமதி பெற்றுவிட்டுப் பள்ளிவாசல் கட்டியுள்ளதாகக் கூறி ஏற்கெனவே வழங்கிய அனுமதியைப் பேரூராட்சி செயல் அலுவலர் ரத்து செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் விதிமீறிக் கட்டப்பட்ட பள்ளிவாசலை இடிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறுத்திவைக்குமாறு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மேல்முறையீடு செய்தனர்.
இந்த முறையீட்டை விசாரித்த நீதிபதி, விசாரணையை 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்ததுடன், முதலில் விதிமீறிக் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்படி பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலையில் அலுவலர்கள் பள்ளிவாசலின் கதவுகளைப் பூட்டி சீல் வைத்தனர். இதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்புக்காகக் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...